நேருக்கு நேர் மோதிய பைக்..."நீ தான் காரணம்?" ஒரே ஒரு போன் கால் - கலவரமான சாலை

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பனையபுரத்தை சேர்ந்த கோவிந்தன் - கல்பனா தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, பாப்பனப்பட்டை சேர்ந்த கமல் என்ற இளைஞர் வந்த இருசக்கர வாகனத்தில் வந்து மோதியதாக தெரிகிறது. இரண்டு வாகனத்தில் இருந்தவர்களும் கீழே விழுந்த நிலையில், விபத்துக்கு காரணம் யார் என்று கமலும், கோவிந்தனும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரும் உறவினர்களை வரவழைத்த‌தால், அவர்கள் மாறிமாறி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டு, சாலையில் சண்டையிட்டுக் கொண்டனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், மோதிக் கொண்டவர்களை எச்சரித்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன விபத்தில் காயமடைந்த 2 பேரும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்