மழையில் கரைந்த தடுப்பு.. - அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

x

சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியில் 4 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பக்கவாட்டில், தடுப்புச்சுவருக்கு பதில் மண் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் மண் சரிந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், மீண்டும் அதே இடத்தில் செம்மண் கொட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பக்கவாட்டு சுவரை கட்டி பாலத்தை காக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்