கூரையை உடைத்து செல் போன் கடையில் கைவரிசை - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

x

சின்னசேலம் அருகே செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். நயினார் பாளையத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன், அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர், மறுநாள் காலை கடையை திறந்து பார்த்த போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு, அதில் இருந்த செல்போன்கள், பேட்டரிகள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்