காரைக்காலில் பேனர் கிழிப்பு..கொந்தளித்த ஆதரவாளர்கள்.. "கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க.."சாஃப்ட்டா பேசி டீல் செய்த அமைச்சர்

x

காரைக்காலில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி, பேனர் வைப்பதில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல்வேறு பகுதிகளில், பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காரைக்காலில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்கள் வைத்த பேனரை, காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் ஆதரவாளர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை-நாகை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது....


Next Story

மேலும் செய்திகள்