மனைவியை சிறை வைத்த பிரபல வங்கி.. ரூ.770 கட்டி மனைவியை மீட்ட கணவன்

x

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். கூலித் தொழிலாளியான இவர், குடும்ப கஷ்டம் காரணமாக, வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் 35 ஆயிரம் ரூபாய் பணம் கடன் பெற்றுள்ளார். வாரம் 770 ரூபாய் வீதம் 52 வார தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தும் வண்ணம் கடன் பெற்று இருந்தாக கூறப்படுகிறது. இதனிடையே, கடன் தவணையை செலுத்த காலதாமதம் ஆனதால், வங்கி ஊழியர் சுபா என்பவர் பிராந்த் வீட்டிற்கு கடனை வசூல் செய்ய சென்றுள்ளார். அங்கு வீட்டில் பிரசாந்த் இல்லாததால், அவரது மனைவி கவுரி சங்கரியை, வங்கிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, தவணை செலுத்திவிட்டு கணவர் அழைத்துச் செல்லட்டும் என வங்கி ஊழியர்கள் கவுரிசங்கரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. விவரம் அறிந்து வங்கிக்கு வந்த பிரசாந்த், 770 ரூபாய் தவணைத் தொகையை கட்டிவிட்டு மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதுதொடர்பாக, பிரசாந்த் அளித்த புகாரின் பேரில், தனியார் வங்கிக்கு வந்த போலீசார் இருதரப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்