மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய ECR | Chennai rain

x

மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய ECR

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்துள்ள கடம்பாடி பகுதியில் உள்ள ஏரியின் உபரி நீரால் கிழக்கு கடற்கரை சாலை மூழ்கடிக்கப்பட்டு, சாலையில் அரிப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் இ.சி.ஆர். சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டு முடங்கியது. சாலை மேம்பாட்டு துறையினர் வெள்ளத்தால் அரிக்கப்பட்ட இ.சி.ஆர். சாலையை தற்காலிகமாக சீரமைத்தனர். இதையடுத்து கடந்த 2 நாட்களாக போக்குவரத்து முடக்கப்பட்ட மாமல்லபுரம் -புதுச்சேரி இ.சி.ஆர். சாலையில் இன்று மீண்டும் போக்குவரத்து துவங்கியது.


Next Story

மேலும் செய்திகள்