"ஜன.22-ல் தீபாவளி".. பிரதமர் சுவாரசிய பேச்சு

x

அரசுத் திட்டங்களின் பயன்கள் அனைவரையும் சென்றடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதலாவது தவணையை பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக விடுவித்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் ஒருபுறம் தீபாவளி கொண்டாடப்படும் வேளையில் மறுபுறம் ஒரு லட்சம் பழங்குடியின சகோதர, சகோதரிகள் தங்கள் இல்லங்களில் தீபாவளியை கொண்டாடுவது தமக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் கூறினார். அரசின் திட்டங்கள் அனைத்தும் பழங்குடியின சகோதர, சகோதரிகளை சென்றடைய வேண்டும் என்பது தான், ஜன்மன் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்து திட்டங்களும் அவர்களை சென்றடைய அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அரசின் திட்டங்களின் பயன்கள் அனைவரையும் சென்றடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்