ருசியாக ரெடியான 1 டன் பிரியாணி.. பரீட்சைக்கு முன்னாடி கம கம விருந்து.. வெளுத்து வாங்கிய மாணவிகள்

x

ஆவடி அருகே பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சிமன்ற தலைவர் கமகம விருந்து அளித்தார். அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி மாணவர்களுக்கு விருந்து அளித்தார். 50 ஆடுகளின் இறைச்சியை கொண்டு 15 டபராக்களில் 1 டன் அளவிலான பிரியாணி சமைக்கப்பட்டு, பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமில்லாமல், பள்ளி பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்