சென்னை அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆட்டோ டிரைவர்.. கவுன்சிலர் கைது

x

மதுராந்தகம் அடுத்த படாளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், வண்டலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் என்பவர், கடந்த 11 நாட்களுக்கு முன்பு பலத்த வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கொலை வழக்கு சம்பந்தமாக, தாம்பரம் மாநகராட்சி 45வது வார்டு கவுன்சிலர் தாமோதரன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணைக்குப் பிறகே, கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளிவரும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்