ரயில் நிலையத்தில் நாட்டுவெடிகுண்டு வீசி கொலை முயற்சி-விழுப்புரத்தில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

x

விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொலை செய்ய முயன்ற 5 பேரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான ரவுடியை தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கத்தை சேர்ந்த பரணிதரன் என்பவர், தனது நண்பருடன், 2 நாட்களுக்கு முன்பு ரயில் நிலைய நடைமேடையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ரவுடி நாராயணசாமி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பரணிதரனை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்து சிதறியதில், பரணிதரனும் அவரது நண்பரும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில் முன்பகை காரணமாக கொலை செய்ய முயற்சித்த‌து தெரியவந்த‌து. இதையடுத்து, தலைமறைவாக உள்ள ரவுடி நாராயணசாமியை தேடி வரும் காவல்துறையினர், அவரது கூட்டாளிகள் 5 பைரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்