ஏடிஎம்மிற்குள் நுழைந்த கும்பல்.. சர்ப்ரைஸ் கொடுத்த `சங்கு’ தலைதெறிக்க ஓடியவர்களுக்கு போலீஸ் வலை

x

திருச்சி, மணிகண்டம் அருகே, அரசு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து மர்மகும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற அரசு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நள்ளிரவில் புகுந்த கும்பல், ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, ஏடிஎம் மையத்திலிருந்த அபாய ஒலி ஒலிக்க ஆரம்பித்ததால் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவி ஆதாரத்துடன் கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே யாசகர் ஒருவரை மர்மகும்பல் தாக்கி பணம் பறித்து சென்றது போலீசாரை சந்தேகமடைய செய்தது. இரு சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்