சென்னை தி.நகரில் பொறுமையை சோதித்த ஏடிஎம்-ஐ அடித்து நொறுக்கிய நண்பர்கள்

x

சென்னை, தி.நகரில் மதுபோதையில் ஏடிஎம்மை அடித்து நொறுக்கிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிண்டியை சேர்ந்த கிருபாகரன் என்பவர், தனது நண்பர் கார்த்திகேயனுடன் சேர்ந்து, கடந்த 26 ஆம் தேதி தி.நகரில் உள்ள எடிஎம்மிற்குள் மதுபோதையில் நுழைந்திருக்கிறார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தை இருவரும் அடித்து நொறுக்கி கொள்ளையடிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்த நிலையில், மது அருந்துவதற்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற போது, பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்மை அடித்து நொறுக்கியதாக இருவரும் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்