மெரினாவில் பயங்கரம் - தூங்கி கொண்டிருந்தவர் மேல் டிராக்டர் ஏறி துடிதுடித்து பலி

x

சென்னை மெரினா கடற்கரையில் டிராக்டர் ஏறி, தூங்கிக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை நேதாஜி சிலை அருகே, 59 வயது மதிக்கத்தக்க ஆண் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது, படகுகளை இழுப்பதற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ட்ராக்டரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது, ஆகாஷ் என்ற காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்