வங்கியில் செய்யவே கூடாததை செய்த உதவி மேலாளர்கள் - 14 ஆண்டுக்கு மறக்கமுடியாத தண்டனை

x

வேலூரில், போலி நகைகளை அடமானம் வைத்து சுமார் 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், தனியார் வங்கி உதவி மேலாளர்கள் இருவர் உட்பட 3 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி மோசடி தொடர்பான வழக்கை விசாரித்த வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், போலி நகைகளை அடகு வைத்த சீனிவாசன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், உடந்தையாக இருந்த உதவி மேலாளர்கள் தர்மராஜ், கிருஸ்டோபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்