விசாரணைக்கு வரும் முக்கிய புள்ளிகளின் சொத்துக் குவிப்பு வழக்கு ...வெளியான முக்கிய தகவல்

x

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட இருப்பதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கு மார்ச் 5 மற்றும் 6-ல் விசாரணை நடைபெற உள்ளது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை, மார்ச் 7, 8ல் நடைபெற உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இந்த தேதிகளில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மார்ச் 8ம் தேதி வாதங்களை தொடங்கி 11ம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்