"இது அரசியல் அல்ல ஆன்மிகம்"...தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா...முருகனை மனமுருக தரிசித்த பக்தர்கள்

x

அறுபடை வீடு ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தின்படி முருகனின் படைவீடான திருச்செந்தூரில் பக்தர்கள் மெய் சிலிர்க்க சாமி தரிசனம் செய்தனர்... வயதான பக்தர்கள் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் அழைத்து செல்லப்படும் இத்திட்டம் கடந்த 28ம் தேதி துவங்கப்பட்டு 210 பக்தர்கள் திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிற்சோலை, பழனி கோயில்களுக்கு சென்று வந்த நிலையில் இன்று 2ம் படை வீடான திருச்செந்தூருக்கு வந்தடைந்தனர்... கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்... தொடர்ந்து முருகனை மனமுருக தரிசித்த அவர்கள் நாளை நான்காம் படைவீடான சுவாமி மலைக்கு செல்லவுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்