மூதாட்டியை கொன்ற கர்ப்பிணி - உண்மையை மறைத்த கணவர், மாமனாருக்கும் நேர்ந்த கதி

x

அரியலூர் அருகே, நகை, பணத்திற்காக ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளரை கொலை செய்து நாடகமாடிய கர்ப்பிணி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.செந்துறை பகுதியை சேர்ந்த பவளக்கொடி என்ற ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர், அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக உடலைக் கைப்பற்றி, சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சரஸ்வதி என்பவர் வீட்டிற்கு சென்ற பவளக்கொடி, வெளியே வரவில்லை என தெரியவந்தது. இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில் சரஸ்வதி என்ற கர்ப்பிணி பெண்ணை போலீசார் விசாரணை நடத்தியதில், மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்தது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து சரஸ்வதியை கைது செய்த போலீசார், இந்த விவகாரத்தை போலீசாரிடம் கூறாமல் மறைத்ததற்காக, அவரது கணவர் செந்தில் மற்றும் மாமனார் ரெங்கராஜ் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்