கணவர் இறந்த செய்தி கேட்ட அடுத்த நொடியே - மனைவிக்கு நடந்த சோகம் - சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்

x

ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 80 வயதான முத்தையன் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். வீட்டின் அருகே முத்தையனின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச் சடங்கை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கணவரின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த 70 வயதான அவரது மனைவி குப்பாயி, மனவேதனை தாளாமல் கதறி அழதார். அப்போது, மயக்கமடைந்து கீழே விழுந்ததில் குப்பாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் இருவரின் உடல்களும் சொந்த கிராமத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்