ஆசை வார்த்தையால் 17 வயதில் கர்ப்பம்.. மகனின் ஊடலுக்கு துணையான பெற்றோர்..

x

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் சிறுமியை கர்ப்பமாக்கிய நிலையில், சிறுமி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துச்சேர்வா மடம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி ஜெயராணி தம்பதியின் மகனான 20 வயது ராஜு கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனது தாய் தந்தையருக்கு தெரிந்தே தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதனால் சிறுமியின் வீட்டில் கண்டித்த நிலையில், அவர் மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்தவாறு சிறுமி அளித்த புகாரின் பேரில், கர்ப்பத்துக்கு காரணமான ராஜூ மற்றும் ராஜூவின் தந்தை சீனிவாசன் மற்றும் அவரது தாய் ஜெயராணி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ராஜுவையும் ஜெயராணியையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்