முதல் நாள் சமைத்த சிக்கன்.. மறுநாள் சாப்பிட்டதால் விஷமாக உருவெடுப்பு..

x

கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அன்பரசி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இந்நிலையில், முதல் நாள் சமைத்த சிக்கன் உணவை, கோவிந்தராஜின் குடும்பத்தினர் மறுநாள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட ஒவ்வாமையால், உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், கோவிந்தராஜின் இளைய மகளான 12 வயது இலக்கியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, தொடர்பாக வழக்குபதிந்துள்ள தா.பழூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்