எறும்பு மருந்து சாப்பிட்டு தலைமைக்காவலர் செய்த செயல் - அதிர்ச்சியில் குடும்பம்

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, எறும்பு மருந்து உட்கொண்டு போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடையார்பாளையம் அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் தா.பழூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். வீட்டில் இருந்த பாண்டியன், எறும்பு மருந்து தின்று விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து விட்டு மயங்கி விழுந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக பணி சுமை காரணமாக, தற்கொலைக்கு முயன்றதாக கூறியதை அடுத்து, இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்