குடி போதையில் அப்பாவிடம் தகராறு.. மகன் போட்ட பகீர் ஸ்கெட்ச்

x

மதுரை மேல் அனுப்பாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற மெண்டல் ரமேஷ் என்பவர், மதுபோதையில் அப்பகுதியில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுபோதையில் மெண்டல் ரமேஷ் கட்டுமானப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மகும்பல், அவரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. மதுபேதையில் தனது தந்தையிடம் ரமேஷ் அடிக்கடி தகராறு செய்து துன்புறுத்தி வந்ததால், ஆத்திரத்தில் இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். அதனைத் தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்