தமிழக சாம்பியன்களுக்கு பாராட்டு விழா..அமைச்சர் உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி

x

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மற்றும் இந்தியாவின் முதன்மை நிலை வீரர் குகேஷ் ஆகியோருக்கு, முகப்பேரில் அவர்கள் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு, மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பிரக்ஞானந்தா மற்றும் குகேஷுக்கு தலா 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதே போன்று, பல்வேறு செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அதே பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு, பள்ளி சார்பில் 60 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்