தூத்துக்குடியில் நிவாரணம் மற்றும் மீட்பு..மக்களின் பாதிப்பை கேட்ட சபாநாயகர் அப்பாவு

x

தூத்துக்க ுடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடியில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. வரிசையில் காத்திருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிச் சென்றனர். தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பாதிப்புகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்கள், படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்