"சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எந்த தேதி வரை..?" - சபாநாயகர் அப்பாவு தகவல்

x

சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, பா.ம.க சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, வருகிற 19ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் வருகிற 22ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்