லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் சிக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

x

திருநெல்வேலியில், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே, நேற்றைய தினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 95 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் உதவி செயற்பொறியாளர் கெளதமன், இளநிலை வரைவு அலுவலர் பாலசுப்பிரமணியன், ஓட்டுநர் இசக்கி ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, செயற்பொறியாளர் வீட்டில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்