அங்கன்வாடி ஊழியர்களிடம் ஆபாச பேச்சு.. நைசாக பேசி தொக்காக தூக்கிய பெண்கள்

x

சிவகங்கையில் அங்கன்வாடி பெண் ஊழியர்களிடம், செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தவரை, அங்கன்வாடி பெண்களே பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன். 52 வயதான இவருக்கு, சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண்களின் செல்போன் எண்கள், கிடைத்துள்ளது. இந்த எண்களை வைத்து, ஒவ்வொரு பெண்ணையும் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதனையடுத்து, அனைத்து பெண்களும் அந்த எண்ணை பிளாக் செய்துள்ளனர். இந்நிலையில், புதிதாக ஒரு அங்கன்வாடி பெண் பணியாளருக்கு, ராஜேந்திரன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, அவர் நைசாக பேசி அவரது, முகவரியை வாங்கியுள்ளார். பின்னர், அவரது வீட்டுக்கே சென்று ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்த அங்கன்வாடி பெண்கள், அவரை உலகம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்