"நாய்களுக்கு மயக்க மருந்து"... நூதனமாக பைக் திருட்டு.. அதிர்ச்சி சிசிடிவி

x

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பக்கத்து வீட்டில் மாட்டி இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. தெரு நாய்கள் குரைக்காமல் இருக்க மயக்க மருந்து தடவிய முட்டைகளை நாய்களுக்கு வீசிவிட்டு நூதன முறையில் திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்