காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய முதியவர்... துடிதுடித்து பலி

x

சோழபுரம் அருகே அய்யாநல்லூர் கிராமத்தில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, ரத்தினக்குமார் என்பவரது விவசாய நிலத்தில், சந்தானம் என்பவர் நேற்று இரவு மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், பணங்குடம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவர், இன்று காலை அவ்வழியாக சென்றுள்ளார். மின்வேலி குறித்து அறியாத அவர், மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரத்தினக்குமார் மற்றும் சந்தானம் ஆகியோரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்