பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி தவறி விழுந்து காயம்... திண்டுக்கல்லில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், பயணி ஏறுவதற்கு முன்பாக ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் மூதாட்டி காயமடைந்த நிலையில், ஓட்டுநருடன், மூதாட்டியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லட்சுமணம் பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள், தனது உறவினருடன் வேடசந்தூர் வந்த நிலையில், ஊர் திரும்புவதற்காக ஆத்து மேடு நிறுத்தத்தில் பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது மூதாட்டி ஏறும் முன் பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால், கீழே விழுந்து மூதாட்டி காயமடைந்துள்ளார். இதனையடுத்து மூதாட்டியை மீட்ட அவரது உறவினர்கள், ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்