8கோடி நிலம் அரசு பள்ளிக்கு தானம் தந்த `அம்மா'..! ஓடோடி சென்று கைகளை பற்றி மதுரை MP நன்றி

x

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாள், தல்லாகுளத்தில் உள்ள வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர், கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த தனது பெயரில் இருந்த 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை அரசின் கல்வித் துறைக்கு தானமாக வழங்கினார்.

இதையறிந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ஆயி பூரணம் அம்மாளை, அவர் பணிபுரியும் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்