ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் தடுத்த ஓட்டுனர்கள் உள்ளே சிக்கிய நோயாளி

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் சொக்கர்கோவில் அருகே, இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ராஜபாளையம் சாலையில், தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இது தொடர்பாக சம்பவத்தன்று அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதியுள்ளனர். இதில், ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக் கொண்டதால் பரபரப்பானது. அதனை பொருட்படுத்தாமல் இருதரப்பினரும் கடைசி வரை வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சாலை இடுக்குகளின் வழியே ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. அப்போது, விபரீதம் அறியாமல் ஓட்டுநர்களின் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வாகன ஓட்டிகளும்ஆம்புலன்ஸூக்கு இடையூறாக இருந்ததால் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.


Next Story

மேலும் செய்திகள்