"அனைத்து குடும்பமும் தமிழகத்தில் வளர வேண்டும்" - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

x

"அனைத்து குடும்பமும் தமிழகத்தில் வளர வேண்டும்" - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

மத்திய அரசின் திட்டங்களால் பிரதமரைக் கண்டு, திமுகவினர் அஞ்சுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறி உள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், தற்போதைய தமிழக அரசால் ஊழலற்ற ஆட்சியை தரமுடியாது என்றும், குடும்ப அரசியலால் தமிழகம் வளர்ச்சி அடைவது சிரமமாக உள்ளதாகவும் கூறினார்.

மத்திய அரசு தரமான அரசியை வழங்கினாலும், தரமற்ற அரிசியை மாநில அரசு விநியோகிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக அமைச்சர்கள் தரம் குறைந்த வார்த்தைகளால் பிரதமரைப் பேசுவதாகவும், தமிழகத்தில் 3 குடும்பம் மட்டுமில்லாது அனைத்து குடும்பமும் வளர வேண்டும் என்றும் பியூஷ் கோயல் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்