"என்ன போட்டு கொடுக்குறாங்க"..போலீசார் ஆடும் ஆடுபுலி ஆட்டம்..வேதனையில் குமுறிய அதிமுக எம்.எல்.ஏ

x

கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களிடம் போலீசார் தன்னை போட்டு கொடுப்பதாக, அதிமுக எம்.எல்.ஏ. செந்தில் குமார் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில், நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், எம்.எல்.ஏ. செந்தில் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், போதைப்பொருள் விற்பனை குறித்து புகார் அளித்தால், போலீசார் அதை விற்பவர்களிடமே சென்று, எம்.எல்.ஏ புகார் கொடுத்துள்ளார், இங்கு விற்க வேண்டாம் வேறு இடத்தில் விற்றுகொள் என்று சொல்வதாக தெரிவித்தார். இதனால், அவர்கள் தனது வீட்டுக்கு வந்து சண்டை போடுவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்