பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள்..பட்டாசு வெடித்து அதகளப்படுத்திய மாணவர்கள்

x

கோவை மாவட்டம் வீரபாண்டியில், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்ட நிலையில், அரசு பேருந்திற்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரபாண்டி பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென, அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் கூடுதல் பேருந்து இயங்க தொடங்கின. இதனையடுத்து பள்ளி வளாகத்தில், அரசு பேருந்துக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்