கண்ணை மறைத்த போதை - நண்பனை கொல்ல ஆயுதமான கல் - துடிக்க துடிக்க அடித்துக் கொன்ற நண்பர்கள்

x

சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த சுந்தர் என்பவரை, சக தொழிலாளரான சரவணக்குமார் என்பர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கல்லால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணையில், மதுபோதையில் நடந்த தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சரவணக்குமார், அவரது நண்பர்களான நாகேந்திரன் மற்றும் மதன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்