TNPSC வெளியிட்ட அதிரடி அப்டேட்

x
  • தோட்டக்கலைத் துறையில் அலுவலர்கள் நிலையிலான 263 காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி, ஒவ்வொரு ஆண்டு இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, அடுத்த ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அட்டவணையை, வரும் டிசம்பர் 15-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிடுகிறது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்றும், மொத்தம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இதில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தோட்டக்கலைத் துறையில் அலுவலர்கள் நிலையிலான 263 காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. டிசம்பர் 24ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் எனவும், பிப்ரவரி 7ஆம் தேதி போட்டி தேர்வு கணினி வழியில் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்