லஞ்ச ஒழிப்புத் துறைக்கு...சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

#thanthitv #highcourt #chennai

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு...சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

சென்னையை அடுத்த சோழவரம் பகுதியில் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வீடு கட்டாதவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டதாகவும் சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புகார் மீது 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, புகார் அளித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முறைகேடு தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, ஏப்ரல் 23ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்