NH-ல் நடந்த கோர விபத்து.. அதிகரித்த பலி எண்ணிக்கை

x

தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது...

தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையி்ல் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி மோதியதில், 2 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதனால், கார் மற்றும் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உடல் கருகிய நிலையில் காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெனிபர் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்