"கோணியில் அள்ளி சென்ற சடலம்" - தந்தையோடு இறந்த செல்ல மகன் - மனதை கல்லாக்கிய கோர சம்பவம்

x

சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்த ஹசீப், காரில் தனது குடும்பத்தினருடன் மதுரை சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதேபோல், மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த ரோசாரியோ என்பவர் தனது 13 வயது மகனுடன் காரில் மதுரை நோக்கி சென்றுள்ளார். கீரனூர் விளக்கு அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், ரோசாரியோவும், அவரது மகனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்