விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் - மக்களுக்கும் காவலர்களுக்கும் டிஜிபி பாராட்டு

x

விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். டிசம்பர் 31-ஆம் தேதி இரவு முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை வரை, தமிழ்நாடு முழுவதும் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும், சாலை விபத்துக்கள் மற்றும் இதர அசம்பாவிதங்களை தடுக்கவும், காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கும், ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்