NLC-யில் விபத்து .. 30 பேர் காயம்

x

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தொழிலாளர்களை அழைத்து சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு என்எல்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுரங்க பகுதிகளில் தொழிலாளர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாகவும் என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்