ஆவின் பால் பாக்கெட்டில் நெளிந்த புழு.. - அதிர்ந்த டீ கடை ஓனர்

x

உதகையில், தேநீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் ஏராளமான புழுக்கள் இருந்ததால், கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். பேக்கிங் செய்யபட்ட 3 அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்களை வாங்கி அவற்றில் இருந்த பாலை டீக்கடை உரிமையாளர் பாத்திரத்தில் ஊற்றியுள்ளார். அப்போது பாலில் ஏராளமான புழுக்கள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகப்பு துறை அதிகாரி சிவராஜ் என்பவர், ஆவின் பாலில் இருந்த புழுக்களையும், ஆவின் பாக்கெட்டுகளையும் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்