ஆவின் பால் பாக்கெட்டில் புழு..! - உண்மையா.?இல்லையா ..? நிர்வாகம் வெளியிட்ட தகவல்

x

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் காளிங்கராயன் வீதியை சேர்ந்தவர் சத்யபிரியா. இவர், தான் வாங்கிய ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழு இருந்ததாக, வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்தார். இந்தநிலையில் இந்த புகாரை, ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆவின் நிர்வாகத்தின் பொது மேலாளர் தலைமையிலான குழுவினர் சத்தியபிரியா வீட்டிற்கு சென்று கள ஆய்வு செய்ததாகவும், அதில் புகார் உண்மைக்கு புறம்பாக உள்ளது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் ஒவ்வொரு நிலையிலும் தரப் பரிசோதனை செய்யப்பட்டு நுண் வடிகட்டிகள் மூலம் வடிகட்டப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்படுவதாகக் கூறியுள்ள ஆவின் நிர்வாகம், ஆவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு பரபரப்படும் இதுபோன்ற செய்திகளை, நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்