பெண்ணிடம் Brain Wash செய்து 7 லட்சத்தை சுருட்டிய சிறு வயது `தோழி' - சிக்கிய பாதிரியார்..

x

தேனியில் வெளிநாட்டில் இருந்து வரவிருக்கும் பணத்திற்கு வரி கட்ட பணம் தேவை எனக்கூறி, பெண் ஒருவரிடம் தேவாலய பாதிரியார் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.தேனி அடுத்த பழனி செட்டிப்பட்டியை சேர்ந்தவர் மகாராணி. திருமணமான இவர், தனது சிறு வயது தோழியான திண்டுக்கல்லை சேர்ந்த டெய்சிராணி என்பவரை நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்திருக்கிறார். அப்போது, தனக்கு தெரிந்த பாதிரியர் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வர இருப்பதாகவும், அப்பணத்தை பெற அரசுக்கு வரி கட்ட வேண்டுமென்பதால், அதற்கு 7 லட்ச ரூபாய் தேவையென மூளைச் சலவை செய்துள்ளார். 7 லட்ச ரூபாய் தரும் பட்சத்தில், வெளிநாட்டில் இருந்து பணம் வந்தவுடன் பணத்தை 3 மடங்காக திருப்பி தருவதாக கூறி மகராணியிடம் இருந்து டெய்சிராணி பணம் பெற்றிருக்கிறார். இதற்காக வெளிநாட்டில் இருந்து வரவிருக்கும் பணம் எனக்கூறி பணக்கட்டுகள் இருக்கும் வீடியோவை அனுப்பி மோசடி செய்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி அருகே கீழத்திருவிழாப்பட்டியை சேர்ந்த தேவாலய பாதிரியார் ராபர்ட் என்பவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள டெய்சிராணியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்