முடக்குவாதத்தால் தவித்த பெண்...கைகொடுத்த தந்தி டிவி... கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பெண்

x

மழை வெள்ளம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் தவித்த முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண், தந்தி டிவி செய்தி எதிரொலியால் மீட்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் தந்தி டிவிக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, மழை வெள்ளத்தால் உணவு, குடிநீர் இன்றி தவித்த தனது தாயை காப்பாற்றக் கோரி அவரது மகன் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் ஒளிபரப்பானது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்ணை மீட்டனர். இந்நிலையில், தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பானதால்தான், தாங்கள் மீட்கப்பட்டதாக கண்ணீர் மல்க அந்தப் பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். தீயணைப்புத் துறைக்கும் தந்தி டிவிக்கும் அந்தப் பெண் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்