இரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை..உறக்கத்தை தொலைத்து அரண்ட மக்கள் - பயங்கர காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் நெலக்கோட்டையில் ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் மக்கள் தூக்கம் இழந்து தவித்தனர்... கடந்த 1 வாரத்திற்கு முன்பு ஒற்றைக் காட்டு யானை பகலிலேயே ஊருக்குள் புகுந்து வாகனங்களைத் தாக்கியதோடு சாலைகளில் அங்கும் இங்கும் நடமாடி அச்சுறுத்தியது... இந்நிலையில் அதே யானை நேற்றிரவு மக்கள் தங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது நகரத்திற்குள் புகுந்து பலத்த சத்தத்துடன் கடைகளைத் தாக்கி உடைக்க முயன்றது... சத்தம் கேட்டு அரண்டு போன பொதுமக்கள் ஒன்றுகூடி யானையை விரட்ட முயன்றனர்... ஆனால் முடியாத நிலையில் வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது... விரட்ட முயன்ற வனத்துறையினரையும் யானை தாக்க முயன்ற நிலையில் பல மணி நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்டினர்


Next Story

மேலும் செய்திகள்