விவசாயி வீட்டிற்குள் புகுந்த திருடன் - புரட்டி எடுத்த பொதுமக்கள்

x

தியாகதுருகம் அருகே, விவசாயி வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. விவசாயியான இவர், ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே செல்ல முயன்றபோது, மர்மநபர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் திருடனை பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்