அதிகாலையில் 3 மணிக்கு கேட்ட திடீர் சத்தம் - சிக்கிய பிரபல கொள்ளையன்

x

உளுந்தூர் பேட்டை அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற பிரபல கொள்ளையர் உட்பட இருவரை போலீசர் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநாவலூர் கெடிலம் பகுதியில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அதிகாலை 3 மணியளவில் ஏடிஎம்முக்குள் புகுந்த இருவர், இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சம்பவத்தின் சத்தம் கேட்டு விரைந்த நிலையில், இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது பிரபல கொள்ளையரான சைதாப்பேட்டை ஷக்கில் அன்வர் மற்றும் பண்ருட்டி பாலாஜி என்பதும், இதில், ஷக்கில் அன்வர் மீது தமிழகம் முழுவதும் 28 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவர, போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்