பூமியில் திடீரென விழுந்த பள்ளம் - ஈரோடு மக்கள் அதிர்ச்சி

x

ஈரோடு மநகரின் முக்கிய பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பள்ளத்தின் அருகே அறிவிப்பு பலகையுடன் தடுப்புகளை அமைத்து, போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் பள்ளம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், மண் அரிப்பு, மழை நீர் மற்றும் கழிவு நீர் தேக்கம் போன்றவற்றால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்